கோவை: சிற்பக் கலைகள், அமராவதி சிலை உள்ளிட்ட பழங்கால சின்னங்களை விளக்கும் நடமாடும் அருங்காட்சியகப் பேருந்து கோவைக்கு வந்துள்ளது.
கோவை: சிற்பக் கலைகள், அமராவதி சிலை உள்ளிட்ட பழங்கால சின்னங்களை விளக்கும் நடமாடும் அருங்காட்சியகப் பேருந்து கோவைக்கு வந்துள்ளது.

சென்னையை மையமாகக் கொண்ட மிகவும் பழமையான அருங்காட்சியகத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நடமாடும் அருங்காட்சியகப் பேருந்து 3 நாள் பயணமாக கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

2-வது நாள் நிகழ்ச்சியில் குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், நிர்மல் மாதா கான்வென்ட் மெட்ரிக் பள்ளிக்கும் இந்தப் பேருந்து செல்கிறது.

சென்னை அருங்காட்சியகத்தைப் போலவே, இந்தப் பேருந்தில் தென்னிந்திய சிற்பக் கலைகள், அமரவாதி சிலைகள், குப்தா, சோழர் காலத்து நாணயங்கள் மற்றும் குகை ஓவியங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

"1851 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை அருங்காட்சியகம் நாட்டின் 2-வது மிகவும் பழமையான அருங்காட்சியகம் ஆகும். இதன் சிறப்புகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ள இந்த அருங்காட்சியகப் பேருந்து மிகவும் உதவிகரமாக இருக்கிறது," என இதன் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் கூறினார்.


சென்னையை மையமாகக் கொண்ட மிகவும் பழமையான அருங்காட்சியகத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நடமாடும் அருங்காட்சியகப் பேருந்து 3 நாள் பயணமாக கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

2-வது நாள் நிகழ்ச்சியில் குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், நிர்மல் மாதா கான்வென்ட் மெட்ரிக் பள்ளிக்கும் இந்தப் பேருந்து செல்கிறது.

சென்னை அருங்காட்சியகத்தைப் போலவே, இந்தப் பேருந்தில் தென்னிந்திய சிற்பக் கலைகள், அமரவாதி சிலைகள், குப்தா, சோழர் காலத்து நாணயங்கள் மற்றும் குகை ஓவியங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

"1851 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை அருங்காட்சியகம் நாட்டின் 2-வது மிகவும் பழமையான அருங்காட்சியகம் ஆகும். இதன் சிறப்புகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ள இந்த அருங்காட்சியகப் பேருந்து மிகவும் உதவிகரமாக இருக்கிறது," என இதன் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் கூறினார்.
