விநாயகர் சதுர்த்துயை முன்னிட்டு கரும்பு சக்கையால் உருவாக்கப்பட்ட ‘பகாஷ் கணபதி’

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரும்பு சக்கையால் ஆன ‘பகாஷ் கணபதி’யை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரும்பு சக்கையால் ஆன ‘பகாஷ் கணபதி’யை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். 

கோவையை அடுத்த சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கரும்பு சக்கையில் இருந்து இந்த விநாயகரை முதல் முறையாக உருவாக்கி உள்ளனர். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகரின் வழிபாட்டிற்காக செம்பு, உலோக அச்சு வடிவத்தைக் கொண்டு பகாஷுடன் ஸ்டார்ச் கலந்து இந்த சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையானது தண்ணீரில் விடப்படும் பொழுது முழுமையாகக் கரைந்து தண்ணீரில் உள்ள மீன் மற்றும் பிற உயிரினங்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. இதனால், செயற்கையான மூலப் பொருட்கள் மூலமாக செய்யப்பட்ட விநாயகர் சிலைகளினால் ஏற்படும் மாசு தடுக்கப்படுகிறது. இந்தக் கல்லூரியின் இயற்கை இழை ஆராய்ச்சி மையத்தினர் இந்த விநாயகரை தயாரித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முயற்சியில் 30 மாணவர்கள் கடந்த ஒரு ஆண்டாக ஈடுபட்டு பகாஷ் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். இந்த சிலையானது குறைந்த விலையில் விரைவில் கிராமம் மற்றும் நகர் மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளனர். 500-க்கும் மேற்பட்ட சிலைகளை மாணவர்கள் தயாரித்து விற்பனைக்காக கொண்டு செல்ல உள்ளனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...