நீலகிரி: கோத்தகிரி அருகே வார்விக் பகுதியில் அரசு பேருந்தின் பின் பகுதியில் மினி லாரி மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த 25 பயணிகள் காயமடைந்தனர்.
நீலகிரி: கோத்தகிரி அருகே வார்விக் பகுதியில் அரசு பேருந்தின் பின் பகுதியில் மினி லாரி மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த 25 பயணிகள் காயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வார்விக் பகுதியில் கடசோலையிலிருந்து கோத்தகிரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்தின் பின்னால் மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வார்விக் என்னும் இடத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினி லாரி, அரசு பேருந்தின் பின்னால் மோதி விபத்திற்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணம் செய்த 25 கூலித்தொழிலாளிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
