உடன்பாடின்றி முடிவடைந்த பிரிக்கால் நிர்வாகம் - தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை

கோவை : பிரிக்கால் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், 2-வது நாளாக நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.


கோவை : பிரிக்கால் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், 2-வது நாளாக நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. 

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் ஆலை நிர்வாகம் பகுதி கதவடைப்பு என்ற பெயரில் 143 தொழிலாளர்களைக் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் வேலையில் இருந்து நீக்கியது. அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி பிரிக்கால் தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் 16-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் நேரிடையாக தலையிட்டு சுமூக முடிவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பிரிக்கால் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, பகுதி கதவடைப்பு என்ற பெயரில் பணிநீக்கம் செய்யப்பட்ட 143 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால், பிரிக்கால் நிர்வாகம் அதனை ஏற்க மறுத்ததால், எந்தவித உடன்பாடும் எட்டாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, மீண்டும் நாளை பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பிரிக்கால் நிர்வாகத்தின் தலைமை மக்கள் அதிகாரி ஆர். மலர்வண்ணன் கூறியதாவது :- தொழிற்சங்கள் 3 கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால், அதனை மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்ள நிர்வாகம் தயாராக உள்ளது. பெரும்பான்மையுடைய கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கம் மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படும். ஆனால், தொழிற்சங்கத்தினர் ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. கதவடைப்பு என்ற பெயரில் பணிநீக்கம் செய்யப்பட்ட 143 தொழிலாளர்கள் புதிய ஒப்பந்தத்தின் பேரில் மீண்டும் பணியமர்த்த நிர்வாகம் தயாராக உள்ளது, என்றார்.





Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...