கோவை : மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது போடப்படும் வழக்குகளைக் கண்டித்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது போடப்படும் வழக்குகளைக் கண்டித்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றை ஆட்சி, ஒற்றை கலாச்சாரம், ஒற்றை கல்வி என ஒற்றை தன்மையை மத்திய அரசு வலுக்கட்டாயமாக திணிக்கப்படுவதாகவும், தற்போது மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த செயற்பாட்டாளர்கள் மாவேஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், சமூக சிந்தனையாளர் கவுதம், மனித உரிமை ஆர்வலர் ஆகியோரின் கைது நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றை ஆட்சி, ஒற்றை கலாச்சாரம், ஒற்றை கல்வி என ஒற்றை தன்மையை மத்திய அரசு வலுக்கட்டாயமாக திணிக்கப்படுவதாகவும், தற்போது மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த செயற்பாட்டாளர்கள் மாவேஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், சமூக சிந்தனையாளர் கவுதம், மனித உரிமை ஆர்வலர் ஆகியோரின் கைது நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.