கோவை: வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் தொல்லைகள் குறைந்திருந்தது. சூழலில், நேற்றிரவு காட்டு யானைகள் கடைகள் மற்றும் தேவாலயத்தை இடித்து சேதப்படுத்திய சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கோவை: வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் தொல்லைகள் குறைந்திருந்தது. சூழலில், நேற்றிரவு காட்டு யானைகள் கடைகள் மற்றும் தேவாலயத்தை இடித்து சேதப்படுத்திய சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு வனப்பகுதியிலிருந்து 26 காட்டு யானைகள் நல்லமுடி பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள ரேசன் கடையின் சுவரை உடைத்து சேதப்படுத்தியது. இதில் கடை முற்றிலும் சேதமடைந்தது.

பின்னர், அங்கிருந்த பிரிந்த 13 காட்டு யானைகள் முடீஸ் பகுதியில் உள்ள கதிரேசன் என்பவரின் கடையை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது. மற்ற 7 காட்டு யானைகள் கூட்டம் முடீஸ் பகுதியிலுள்ள தேவாலயத்தின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை தூக்கி வெளியே எறிந்து சேதப்படுத்தின.

தகவலறிந்து வந்த வனத்துறையினர், போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருப்பினும் காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டிருப்பதால் இன்று இரவு குடியிருப்புக்குள் வரலாம் என்ற அச்சத்திலும் பீதியிலும் பொதுமக்கள் உறைந்துள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு வனப்பகுதியிலிருந்து 26 காட்டு யானைகள் நல்லமுடி பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள ரேசன் கடையின் சுவரை உடைத்து சேதப்படுத்தியது. இதில் கடை முற்றிலும் சேதமடைந்தது.

பின்னர், அங்கிருந்த பிரிந்த 13 காட்டு யானைகள் முடீஸ் பகுதியில் உள்ள கதிரேசன் என்பவரின் கடையை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது. மற்ற 7 காட்டு யானைகள் கூட்டம் முடீஸ் பகுதியிலுள்ள தேவாலயத்தின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை தூக்கி வெளியே எறிந்து சேதப்படுத்தின.

தகவலறிந்து வந்த வனத்துறையினர், போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருப்பினும் காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டிருப்பதால் இன்று இரவு குடியிருப்புக்குள் வரலாம் என்ற அச்சத்திலும் பீதியிலும் பொதுமக்கள் உறைந்துள்ளனர்.