கோவை: கோவையில் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை: கோவையில் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் புகார் மனு அளித்துள்ளார்.
இந்தாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு எஸ்.சி.எம். அரசு உதவி பெரும் பள்ளியின் ஆசிரியர் தேர்வு ஈஷ்வரன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அவருக்கு எதிராக கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், " ஈஷ்வரன், 'தூரிகை' என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். அரசியலமைப்பு சட்டத்தின் படி (8(4) (a)) , அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர் ஒருவர் இது போன்ற புத்தகங்களை எழுதும் போது, மாவட்ட தொடர்க்க கல்வி அலுவலரின் அனுமதியைப் பெற வேண்டும், ஆனால், ஈஷ்வரன் யாரிடமும் அனுமதி பெறவில்லை.
இது தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தோம். இந்த சூழலில், அவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. விதிமுறைகளை மீறும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. ஆனால், தற்போது அவருக்கு விருது வழங்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜ்குமார் கூறுகையில், "ஈஷ்வரன் இந்த விருதுக்கு தகுதியானவர் இல்லை. அவரது பெயரை பரிந்துரைத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
இந்தாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு எஸ்.சி.எம். அரசு உதவி பெரும் பள்ளியின் ஆசிரியர் தேர்வு ஈஷ்வரன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அவருக்கு எதிராக கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், " ஈஷ்வரன், 'தூரிகை' என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். அரசியலமைப்பு சட்டத்தின் படி (8(4) (a)) , அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர் ஒருவர் இது போன்ற புத்தகங்களை எழுதும் போது, மாவட்ட தொடர்க்க கல்வி அலுவலரின் அனுமதியைப் பெற வேண்டும், ஆனால், ஈஷ்வரன் யாரிடமும் அனுமதி பெறவில்லை.
இது தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தோம். இந்த சூழலில், அவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. விதிமுறைகளை மீறும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. ஆனால், தற்போது அவருக்கு விருது வழங்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜ்குமார் கூறுகையில், "ஈஷ்வரன் இந்த விருதுக்கு தகுதியானவர் இல்லை. அவரது பெயரை பரிந்துரைத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.