கோவை: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த தவறியதால் வடகோவையில் உள்ள கனகதாரா திரையரங்கத்தின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை துண்டித்தனர்.
கோவை: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த தவறியதால் வடகோவையில் உள்ள கனகதாரா திரையரங்கத்தின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை துண்டித்தனர்.
சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட கட்டணங்களை செலுத்துவதில் தாமதம் செய்துவரும் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு மண்டலம், 22-வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள கனகதாரா திரையரங்க நிர்வாகத்தினர் கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கேளிக்கை வரி, குடிநீர் கட்டணம், சொத்து வரி மற்றும் ஆபாரதத் தொகை என மொத்தம் ரூ.25,56,568யை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.
நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தக்கோரி மாநகராட்சி சார்பில் அறிவிப்பு அனுப்பப்பட்டு ஒரு மாதம் ஆகியும் திரையரங்கம் சார்பில் பதில் வராததையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.