மேட்டுப்பாளையம் நகராட்சியின் ஆணையராக எம். காந்திராஜ் பதவியேற்பு

கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சியின் புதிய ஆணையராக எம். காந்திராஜ் இன்று பதிவியேற்றுக் கொண்டார்.

கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சியின் புதிய ஆணையராக எம். காந்திராஜ் இன்று பதிவியேற்றுக் கொண்டார்.

கோவை மாவட்டத்தில் மிகவும் முக்கிய நகராட்சிகளில் ஒன்றான மேட்டுப்பாளையம் நகராட்சிக்கென தனி ஆணையர் நியமிக்கப்படாமல், இங்குள்ள நகராட்சி பொறியாளரே ஆணையர் பணியினை கூடுதலாக கவனித்து வந்தனர். பல ஆண்டு காலமாக இதே நிலை தான் தொடர்கிறது. இந்த நிலையில், பலகட்ட போராட்டத்திற்கு பின்பு, கடந்த வருடம் நியமிக்கப்பட்ட ஆணையரும் பணி ஓய்வு பெற்று சென்றுவிட்டார். இதனால், 6 மாதத்தில் மீண்டும் ஆணையர் பணி காலியானது. மீண்டும் நகராட்சி பொறியாளரே கூடுதலாகப் பணியினை கவனித்து வந்தார்.

தற்போது, மேட்டுப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டம் பணி ரூ. 91 கோடி செலவில் தொடங்க திட்டமிட்டு பூமி பூஜை நடத்தப்பட்டது. இருப்பினும், பணிகள் துவங்கப்படவில்லை. மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு ஆணையாளர் இல்லாததால், இதுபோன்ற பணிகள் தாமதமாவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு தனி ஆணையர் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் புதிய நகராட்சி ஆணையாளராக எம். காந்திராஜ் இன்று முறைப்படி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர், பொதுமக்களின் குறைகளை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதாள சாக்கடை திட்டம் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...