குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் பெர்சிமன் பழத்தின் சீசன் தொடக்கம்

நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் தொடங்கியது.


நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் தொடங்கியது. 

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பேரி, ஆரஞ்சு, பீச், பிளம்ஸ், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை "பெர்சிமன்' பழ மரங்களும் உள்ளன. இப்பூங்காவில் மொத்தம் உள்ள 109 பெர்சிமன் பழ மரங்களில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. பெர்சிமன் பழங்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குகின்றன. 



பொதுவாக, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்குள் பெர்சிமன் சீசன் துவங்கும். ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்ட இப்பழம், ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் விளங்கி வருகிறது. தக்காளி போன்ற தோற்றத்தைக் கொண்ட இப்பழத்தில் வைட்டமின் "ஏ' மற்றும் "பி' சத்து நிறைந்துள்ளது. இப்பழங்கள் பிற பழங்களை போன்று மரத்திலேயே பழுப்பதில்லை. மாறாக, காய் வடிவில் பறிக்கப்படும் இப்பழத்தை "எத்தனால்' என்ற திரவத்தில் ஊற வைத்தால்தான் இரண்டு நாட்கள் கழித்து பழுக்கும். 



தென்மாநில அளவில் குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலைப் பண்ணையில் மட்டும் தான் இப்பழ மரங்கள் உள்ளன. இப்பழங்கள் கிலோ ரூ. 150-க்கு விற்கப்படுகின்றன. இப்பழ மர நாத்துகளும் தோட்டக்கலைப் பண்ணையில் விற்கப்படுகின்றன. தற்போது, சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் இந்தப் பழத்தை ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...