நீலகிரி : கர்நாடகாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபரை கூடலூர் அருகே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நீலகிரி : கர்நாடகாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபரை கூடலூர் அருகே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெளி மாநிலங்களில் இருந்து உதகை மாவட்டத்திற்கு போதைப் பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதை தடுக்க நீலகிரி மாவட்ட எஸ்.பி., சண்முகபிரியாவின் உத்தரவின் பேரில் சோதனை சாவடிகளில் கடும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கூடலூர் அருகே உள்ள காக்கநல்லா சோதனை சாவடியில் எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்த பேருந்தில் சோதனை மேற்கொண்டனர். அதில், கஞ்சா பொட்டலங்களைக் கடத்தி வந்த ஓ.வேலியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி குணசேகர் (21) மற்றும் சையபுதீன் ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே, கஞ்சா வியாபாரி குணசேகர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, கஞ்சா போதையில் பெற்ற தாய் மற்றும் சகோதரியை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனிடையே, குணசேகரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தெப்பக்காடு பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார், விஜயன், மில்கி, மகேஷ் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து உதகை மாவட்டத்திற்கு போதைப் பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதை தடுக்க நீலகிரி மாவட்ட எஸ்.பி., சண்முகபிரியாவின் உத்தரவின் பேரில் சோதனை சாவடிகளில் கடும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கூடலூர் அருகே உள்ள காக்கநல்லா சோதனை சாவடியில் எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்த பேருந்தில் சோதனை மேற்கொண்டனர். அதில், கஞ்சா பொட்டலங்களைக் கடத்தி வந்த ஓ.வேலியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி குணசேகர் (21) மற்றும் சையபுதீன் ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே, கஞ்சா வியாபாரி குணசேகர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, கஞ்சா போதையில் பெற்ற தாய் மற்றும் சகோதரியை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனிடையே, குணசேகரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தெப்பக்காடு பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார், விஜயன், மில்கி, மகேஷ் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.