பொறியாளரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கு : காவல் ஆய்வாளருக்கு ரூ. 50,000 அபராதம்

திருப்பூர் : பொறியாளரை விசாரணைக்கு அழைத்து அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில், மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆய்வாளருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.


திருப்பூர் : பொறியாளரை விசாரணைக்கு அழைத்து அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில், காவல் ஆய்வாளருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2011-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் வலையபாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் எனும் பொறியாளரை வழக்கு விசாரணைக்காக அவிநாசிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அவரை அரை நிர்வாணமாக்கி தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அருண் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். 

அதனடிப்படையில், விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், அப்போதைய அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் தன்னாசிபாண்டியன் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காவல் ஆய்வாளர் தன்னாசிபாண்டியனுக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இந்தத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு நான்கு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் அவர் கெடு விதித்தார். தற்போது, ஆய்வாளர் தன்னாசிபாண்டியன் பணி ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...