கோத்தகிரியில் நில மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி: கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீலகிரி: கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெடுகுளா, கன்னேரி மற்றும் கொணவக்கரை ஊராட்சிகள் ஆனந்தகிரி, அண்ணாகாலனி, கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட கன்னிகாதேவி காலனி பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர்வசதிகள் போன்றவை உள்ளனவா என பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

மேலும், காக்கா சோலை, கன்னேரி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 4.12 லட்சம் மதிப்பில் நிலமேம்பாட்டு பணியின் மூலம் தனிநபர் விவசாய நிலங்களில் உள்ள தேவையற்ற தாவரங்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்த நிலமேம்பாட்டு பணியின் மூலம் தனிநபர் விவசாய நிலங்களைப் பராமரிக்க வசதியின்றி விவசாயம் செய்யாமல் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை மேம்படுத்தி விவசாயம் செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். இந்த ஆய்வின் போது கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதி, கோல்டி சாராள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...