அவிநாசி அருகே எலி காய்ச்சலுக்கு பெண் பலி : உயிரிழப்புக்கு பின்னரே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகப் பொதுமக்கள் புகார்

திருப்பூர் : அவிநாசி அருகே எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் சுகாதாரத் துறையினர் துப்புரவு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : அவிநாசி அருகே எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் சுகாதாரத் துறையினர் துப்புரவு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.



அவிநாசியை அடுத்த தெக்கலூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவரது மனைவி காந்திமதி (52), கடந்த இரண்டு வாரமாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

இதனையடுத்து, அப்பகுதியில் காய்ச்சல் மேலும் பரவாமல் மாவட்ட சுகாதார துறையினர் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமத்துவபுரம் பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படாமல், குப்பை கூளங்களாகவும் துர்நாற்றம் வீசும் பகுதியாக உள்ளதாகவும் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில், தற்போது ஒருவர் உயிரிழந்த பின்னரே துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...