கோவை: பிரிக்கால் தொழிலாளர்கள் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி, தொழிலாளர் நல அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கோவை: பிரிக்கால் தொழிலாளர்கள் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி, தொழிலாளர் நல அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் பிரிக்கால் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தை சேர்ந்த 144 தொழிலாளர்கள் பகுதி கதவடைப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், புதிய சம்பள உயர்வை இழுத்தடித்து வருவதாகவும், ரகசிய வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மை சங்கத்தைக் கண்டறிந்து பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாகவும் அத்தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
பிரிக்கால் நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து 15-வது நாளாக தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண கோரி, தொழிலாளர் நல அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் பிரிக்கால் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தை சேர்ந்த 144 தொழிலாளர்கள் பகுதி கதவடைப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், புதிய சம்பள உயர்வை இழுத்தடித்து வருவதாகவும், ரகசிய வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மை சங்கத்தைக் கண்டறிந்து பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாகவும் அத்தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
பிரிக்கால் நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து 15-வது நாளாக தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண கோரி, தொழிலாளர் நல அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.