கோவை: உதகை நகருக்குள் புகுந்த காட்டெருமை, தற்போது தாவரவியல் பூங்கா அருகே சுற்றுத் திரிவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை: உதகை நகருக்குள் புகுந்த காட்டெருமை, தற்போது தாவரவியல் பூங்கா அருகே சுற்றுத் திரிவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
உதகை கமர்சியல் சாலையில் நேற்று (திங்கட்கிழமை) புகுந்த ஒற்றை காட்டெருமை அங்குள்ள நூலக வளாகத்தில் சுற்றித்திரிந்தது. பகல் நேரம் என்பதாலும் அருகில் பள்ளிக்கூடம் இருப்பதாலும் அதனை விரட்டாமல் அதை அங்கேயே இருக்கும் படி பார்த்துக் கொண்டனர். இருந்த போதிலும், அதனைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தொடர்ந்து,
கடந்த 14 மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே இருந்த காட்டெருமை இரவு நேரம் விரட்டப்பட்டது. அங்கிருந்து ஓடிய காட்டெருமை தாவரவியல் பூங்கா அருகில் உள்ள கோடப்மந்த் சோலைக்குள் புகுந்தது. இந்த இடம் தாவரவியல் பூங்காவிற்கு மிக அருகில் இருப்பதால் இந்த காட்டெருமை தொடர்ந்து பூங்கா அருகில் சுற்றி வருகிறது.
இன்னும் சில நாட்களில் உதகையில் இரண்டாம் சீசன் துவங்க உள்ள நிலையில் இந்த காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.