சென்னை: சோபியா கைது விவகாரத்தில், அவர் இப்படி பேசியிருக்கலாமா? என்றும், பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் மரியாதை இது தானா? என்றும் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: சோபியா கைது விவகாரத்தில், அவர் இப்படி பேசியிருக்கலாமா? என்றும், பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் மரியாதை இது தானா? என்றும் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் சோபியா என்ற மாணவி பாசிச பா.ஜ.க அரசு ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து அவருடன் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த மாணவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தூத்துக்குடி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விமானத்தில் நான் எனது இருக்கையில் அமர்ந்தவுடன் பாசிச பா.ஜ.க அரசு ஒழிக என சோபியா கோஷமிட்டார். அப்போது நான் ஏதோ சின்ன பெண் கோஷமிடுகிறார் என விட்டுவிட்டேன். இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் தொடர்ந்து கோஷமிட்டார். நாகரிகம் கருதியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்று கருதியும் சமூக அக்கறையாலும் நான் அமைதியாக இருந்தேன்.
பின்னர், விமானத்தில் இருந்து இறங்கியதும் அந்த பெண் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே சென்றார். அப்போது அவரிடம் பொது தளத்தில் இப்படி பேசுவது முறையா? என கேட்டேன். அதற்கு அவரோ, 'இது எனது பேச்சுரிமை' என்றார். அதுமட்டுமல்லாமல் என்னை அநாகரிகமாகப் பேசினார். அவரை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குகிறார்கள். எனக்கு அந்த சந்தேகம் இருந்தது. அதனால் போலீசாரிடம் விசாரிக்கக் கோரி புகார் அளித்தேன். கைது நடவடிக்கை என்பது காவல்துறை சம்மந்தப்பட்டது.
ஸ்டாலின் நியாயம் பேசலாமா?
பேச்சுரிமை என்றால் அதற்கான இடம், நேரம், களம் எல்லாம் கிடையாதா. அதற்காக விமானத்தில் பேசலாமா. வீட்டுக்குச் சென்று சண்டையிட்டால் அது சரியாகிவிடுமா. பேசுவது என்றால் மேடை போட்டு பேச வேண்டும். இந்த சம்பவத்துக்கு என்னை ஸ்டாலின் கண்டித்துள்ளார். நான் கேட்கிறேன், அவரது கட்சியை பற்றி தவறாக பேசியவர்களை மெட்ரோ ரயிலில் அடித்ததை மறந்துவிட்டாரா? தங்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் தினகரன் அலுவலகத்தை எரித்தவர்கள் இன்று நியாயம் பேசுவதா?
இவ்வாறு தமிழிசை கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் சோபியா என்ற மாணவி பாசிச பா.ஜ.க அரசு ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து அவருடன் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த மாணவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தூத்துக்குடி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விமானத்தில் நான் எனது இருக்கையில் அமர்ந்தவுடன் பாசிச பா.ஜ.க அரசு ஒழிக என சோபியா கோஷமிட்டார். அப்போது நான் ஏதோ சின்ன பெண் கோஷமிடுகிறார் என விட்டுவிட்டேன். இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் தொடர்ந்து கோஷமிட்டார். நாகரிகம் கருதியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்று கருதியும் சமூக அக்கறையாலும் நான் அமைதியாக இருந்தேன்.
பின்னர், விமானத்தில் இருந்து இறங்கியதும் அந்த பெண் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே சென்றார். அப்போது அவரிடம் பொது தளத்தில் இப்படி பேசுவது முறையா? என கேட்டேன். அதற்கு அவரோ, 'இது எனது பேச்சுரிமை' என்றார். அதுமட்டுமல்லாமல் என்னை அநாகரிகமாகப் பேசினார். அவரை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குகிறார்கள். எனக்கு அந்த சந்தேகம் இருந்தது. அதனால் போலீசாரிடம் விசாரிக்கக் கோரி புகார் அளித்தேன். கைது நடவடிக்கை என்பது காவல்துறை சம்மந்தப்பட்டது.
ஸ்டாலின் நியாயம் பேசலாமா?
பேச்சுரிமை என்றால் அதற்கான இடம், நேரம், களம் எல்லாம் கிடையாதா. அதற்காக விமானத்தில் பேசலாமா. வீட்டுக்குச் சென்று சண்டையிட்டால் அது சரியாகிவிடுமா. பேசுவது என்றால் மேடை போட்டு பேச வேண்டும். இந்த சம்பவத்துக்கு என்னை ஸ்டாலின் கண்டித்துள்ளார். நான் கேட்கிறேன், அவரது கட்சியை பற்றி தவறாக பேசியவர்களை மெட்ரோ ரயிலில் அடித்ததை மறந்துவிட்டாரா? தங்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் தினகரன் அலுவலகத்தை எரித்தவர்கள் இன்று நியாயம் பேசுவதா?
இவ்வாறு தமிழிசை கூறினார்.