திருப்பூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற வாலிபர், நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர்: திருப்பூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற வாலிபர், நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் - வீரபாண்டி பகுதி திருமுருகன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஹரிகிருஷ்ணன் (21). ஐ.டி.ஐ., படித்துவிட்டு வேலை தேடி வந்தார். இதனிடையே, ஹரிகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் சேர்த்து அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். நீச்சல் தெரியாத அவர், தெர்மாகோல் அட்டை மூலம் நண்பர்களுடன் கிணற்றில் இறங்கிக் குளித்து கொண்டிருந்தார். 

இந்த நிலையில், கிணற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற ஹரிகிருஷ்ணன் நீரில் மூழ்கியுள்ளார். இதையடுத்து, அவர் நீரில் மாயமானார். தொடர்ந்து, அவரது நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் வீரபாண்டி போலீசார், தீயணைப்புதுறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...