தடாகம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து அரிசியை உண்ட யானைகள்: தப்பியோடிய பொதுமக்கள்

கோவை: தடாகம் அருகே நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: தடாகம் அருகே நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

களையனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், ஜெயக்கொடி தம்பதியினர். இவர்களுக்கு கிஷோர் என்ற 19 வயது மகன் உள்ளார். இன்று நள்ளிரவு 2.30 மணியளவில் வீட்டின் வெளியே சத்தம் கேட்கவே, சக்திவேல் அங்கு சென்று பார்த்தார். அப்போது ஒரு தாய் யானையும், ஒரு குட்டி யானையும் வீட்டின் கதவினை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.



இதனால் பதற்றமடைந்த சக்திவேல் மற்றும் ஜெயக்கொடி ஆகிய இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். வீட்டினுள் சிக்கிக்கொண்ட கிஷோர் அங்கிருந்த சிமென்ட் சிலாப்பில் ஏறிக் கொண்டார்.

தொடர்ந்து, கதவை உடைத்து உள்ளே சென்ற குட்டி யானை வீட்டினுள் இருந்த அரிசியை தூக்கி சென்றது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பதாகவும், இதனை உடனடியாக களைய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...