பணம் கேட்டு மிரட்டுவதாக உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகை

நீலகிரி : சுற்றுலா நகரமான உதகையில் இயங்கி வரும் சுற்றுலா வாகன ஓட்டிகளிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நீலகிரி: சுற்றுலா நகரமான உதகையில் இயங்கி வரும் சுற்றுலா வாகன ஓட்டிகளிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, தொட்டபெட்டா சிகரம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்

இதனிடையே, உதகையில் இயங்கி வரும் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் வட்டார ஆய்வாளர் ஆகியோருக்கு மாதாந்தோறும பணம் கொடுக்க வேண்டும், தவறும்பட்சத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதாக சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகக் கூறிய அவர்கள், மேலும் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும் கூறினார். இந்த முற்றுகை போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...