நீலகிரி : சுற்றுலா நகரமான உதகையில் இயங்கி வரும் சுற்றுலா வாகன ஓட்டிகளிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நீலகிரி: சுற்றுலா நகரமான உதகையில் இயங்கி வரும் சுற்றுலா வாகன ஓட்டிகளிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, தொட்டபெட்டா சிகரம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்
இதனிடையே, உதகையில் இயங்கி வரும் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் வட்டார ஆய்வாளர் ஆகியோருக்கு மாதாந்தோறும பணம் கொடுக்க வேண்டும், தவறும்பட்சத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதாக சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகக் கூறிய அவர்கள், மேலும் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும் கூறினார். இந்த முற்றுகை போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, தொட்டபெட்டா சிகரம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்
இதனிடையே, உதகையில் இயங்கி வரும் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் வட்டார ஆய்வாளர் ஆகியோருக்கு மாதாந்தோறும பணம் கொடுக்க வேண்டும், தவறும்பட்சத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதாக சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகக் கூறிய அவர்கள், மேலும் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும் கூறினார். இந்த முற்றுகை போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.