பா.ஜ.க., எதிர்ப்பு கோஷத்தால் விமானத்தில் இளம்பெண்ணிடம் தமிழிசை வாக்குவாதம் : நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க.,வினர் போராட்டம்

சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் ஒருவருடன் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தூத்துக்குடியில் பா.ஜ.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் ஒருவருடன் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தூத்துக்குடியில் பா.ஜ.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றாலத்தில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த 1,000 பேர் பா.ஜ.க.,வில் இணையும் விழாவில் பங்கேற்பதற்காக மாநில பா.ஜ.க., தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடிக்கு சென்றார். அவர் சென்ற விமானத்தில் கிருஷ்ணசாமி என்பவரது மகள் லுாயிஸ்சோபியா (23) என்ற இளம்பெண்ணும் பயணித்தார். அப்போது, அந்த இளம்பெண் பா.ஜ.க., விற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் விமானத்தில் கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த தமிழிசை சவுந்தரராஜன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இச்சம்பவம் குறித்து விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யாவிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், லுாயிஸ்சோபியாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ஏதாவதொரு அமைப்பின் தூண்டுதலால் சோபியா பா.ஜ.க.,வை விமர்சித்திருக்கலாம் என தெரிவித்தார்.

இதனிடையே, விமானத்தில் பா.ஜ.க.,வை அவதூறாகப் பேசிய இளம்பெண் சோபியாவை கைது செய்யக் கோரியும், இனி எந்த விமானத்திலும் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் முன்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் ஏராளமான பா.ஜ.க வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் புதுக்கோட்டை காவல்நிலையம் முன்பு பா.ஜ.க.,வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி நகர டி.எஸ்.பி., பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட இளம்பெண் சோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்ததின் பேரில் பா.ஜ.க.,வினர் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...