நீலகிரி: உதகை நகருக்குள் புகுந்த காட்டெருமையை விரட்டும் பணியில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி: உதகை நகருக்குள் புகுந்த காட்டெருமையை விரட்டும் பணியில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள வனப்பகுதி பல்வேறு வன உயிரினங்களின் புகலிடமாக திகழ்கிறது. இந்நிலையில், உணவு மற்றும் தண்ணீர் தேடி நகர்ப்புறங்களிலும், கிராமப்புற பகுதிகளுக்கும் வனவிலங்குகள் அவ்வப்போது வருகின்றன. அப்படி வரும் விலங்கினங்கள் விளை நிலங்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்துவதால் மனித, வன விலங்குகள் மோதல் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகி வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், இன்று உதகை கமர்சியல் சாலையில் புகுந்த ஒற்றை காட்டெருமை அங்குள்ள நூலக வளாகத்தில் சுற்றித்திரிந்தது. சுமார் 8 மணி நேரமாகியும் வனப்பகுதிக்குள் துரத்த முடியாததால் வனத்துறையினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கண்காணித்து வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் குறைந்ததும் இன்று இரவு இந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டி விடுவோம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள வனப்பகுதி பல்வேறு வன உயிரினங்களின் புகலிடமாக திகழ்கிறது. இந்நிலையில், உணவு மற்றும் தண்ணீர் தேடி நகர்ப்புறங்களிலும், கிராமப்புற பகுதிகளுக்கும் வனவிலங்குகள் அவ்வப்போது வருகின்றன. அப்படி வரும் விலங்கினங்கள் விளை நிலங்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்துவதால் மனித, வன விலங்குகள் மோதல் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகி வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், இன்று உதகை கமர்சியல் சாலையில் புகுந்த ஒற்றை காட்டெருமை அங்குள்ள நூலக வளாகத்தில் சுற்றித்திரிந்தது. சுமார் 8 மணி நேரமாகியும் வனப்பகுதிக்குள் துரத்த முடியாததால் வனத்துறையினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கண்காணித்து வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் குறைந்ததும் இன்று இரவு இந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டி விடுவோம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.