நீலகிரி : குன்னூர் பேருந்து நிலையம் அருகே தரமில்லாத கட்டிடத்தில் இயங்கி வந்த பிரபல உணவகத்திற்கு நகராட்சி ஆணையர் சரஸ்வதி தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நீலகிரி: குன்னூர் பேருந்து நிலையம் அருகே தரமில்லாத கட்டிடத்தில் இயங்கி வந்த பிரபல உணவகத்திற்கு நகராட்சி ஆணையர் சரஸ்வதி தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.
குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 893 கடைகளை நடத்தி வருபவர்கள், அதனை வேறு நபர்களுக்கு விற்றுள்ளதும், உள் வாடகையாக பல ஆயிரங்கள் வரை மாதந்தோறும் வசூலித்து வருவதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையர் சரஸ்வதி இந்த கடைகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் வருவாய் ஈட்டும் வகையில் கடைகளுக்கான வாடகையை உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டு அவர்களுக்கு இன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனிடையே, பேருந்து நிலையம் அருகே தரமில்லாத கட்டிடத்தில் இயங்கி வந்த பிரபல உணவகத்தை உடனடியாக காலி செய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்தக் காலக்கெடு இன்றுடன் முடிந்த நிலையி்ல், அந்த உணவகம் தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த நிலையில், அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
ஏற்கனவே, நகராட்சிக்கு சொந்தமான ஏறக்குறைய 25 கடைகளை இந்த உணவக நிர்வாகம் உள்வாடகைக்கு விட்டிருந்தது கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 893 கடைகளை நடத்தி வருபவர்கள், அதனை வேறு நபர்களுக்கு விற்றுள்ளதும், உள் வாடகையாக பல ஆயிரங்கள் வரை மாதந்தோறும் வசூலித்து வருவதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையர் சரஸ்வதி இந்த கடைகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் வருவாய் ஈட்டும் வகையில் கடைகளுக்கான வாடகையை உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டு அவர்களுக்கு இன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனிடையே, பேருந்து நிலையம் அருகே தரமில்லாத கட்டிடத்தில் இயங்கி வந்த பிரபல உணவகத்தை உடனடியாக காலி செய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்தக் காலக்கெடு இன்றுடன் முடிந்த நிலையி்ல், அந்த உணவகம் தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த நிலையில், அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
ஏற்கனவே, நகராட்சிக்கு சொந்தமான ஏறக்குறைய 25 கடைகளை இந்த உணவக நிர்வாகம் உள்வாடகைக்கு விட்டிருந்தது கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது