கோவை : கோவையில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.
கோவை: கோவையில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.
மனதை அமைதிப்படுத்தவும், இந்த காலகட்ட குழந்தைகள் காண முடியாதவாறு மறைந்து போன பட்டம் விடும் நிகழ்வுகளைக் காண செய்வதற்காக, கோவையில் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான டைமன்ட் சிட்டி டெவலப்பர்ஸ் சார்பில் ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டம் விடும் திருவிழா கடந்த 1-ம் தேதி கோவையில் நடைபெற்றது. அதில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வண்ணமயமான பட்டங்கள் வழங்கப்பட்டன. சர்வதேச அளவில் பட்டம் விடும் நிபுணர்களின் நேரடி ஆலோசனையில் பட்டங்களைப் பறக்க விட்டனர்.
அதோடு, வண்ணமயமான ராட்சச பட்டம், 300 பட்டங்களைக் கொண்ட சங்கிலித்தொடர் பட்டம், டிராகன் பட்டம், மிருகங்களின் உருவ வடிவிலான பட்டம் உள்பட பல்வேறு விதமான பட்டங்களை நிபுணர்கள் பறக்கவிட்டனர்.
மனதை அமைதிப்படுத்தவும், இந்த காலகட்ட குழந்தைகள் காண முடியாதவாறு மறைந்து போன பட்டம் விடும் நிகழ்வுகளைக் காண செய்வதற்காக, கோவையில் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான டைமன்ட் சிட்டி டெவலப்பர்ஸ் சார்பில் ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டம் விடும் திருவிழா கடந்த 1-ம் தேதி கோவையில் நடைபெற்றது. அதில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வண்ணமயமான பட்டங்கள் வழங்கப்பட்டன. சர்வதேச அளவில் பட்டம் விடும் நிபுணர்களின் நேரடி ஆலோசனையில் பட்டங்களைப் பறக்க விட்டனர்.
அதோடு, வண்ணமயமான ராட்சச பட்டம், 300 பட்டங்களைக் கொண்ட சங்கிலித்தொடர் பட்டம், டிராகன் பட்டம், மிருகங்களின் உருவ வடிவிலான பட்டம் உள்பட பல்வேறு விதமான பட்டங்களை நிபுணர்கள் பறக்கவிட்டனர்.