தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5,77,186 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் மட்டும் 1,425 பேரின் பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5,77,186 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் மட்டும் 1,425 பேரின் பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த சனிக்கிழமை வெளியிட்டனர். இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இருமுறை பதிவானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 31-ம் தேதி வரையில் 5,77,186 பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவையில் 1,425 பேரின் பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதில், இறப்பினால் 83 பேரின் பெயர்களும், இடமாற்றத்தினால் 447 பேரும், இருமுறை பதிவால் 895 பேரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் இருந்து 1,05,042 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் 72,472 பேரும், திருவள்ளூரில் 53,815 பேரும், வேலூரில் 38,071 பேரின் பெயர்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த சனிக்கிழமை வெளியிட்டனர். இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இருமுறை பதிவானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 31-ம் தேதி வரையில் 5,77,186 பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவையில் 1,425 பேரின் பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதில், இறப்பினால் 83 பேரின் பெயர்களும், இடமாற்றத்தினால் 447 பேரும், இருமுறை பதிவால் 895 பேரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் இருந்து 1,05,042 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் 72,472 பேரும், திருவள்ளூரில் 53,815 பேரும், வேலூரில் 38,071 பேரின் பெயர்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.