கோவையில் விளையாட்டு மைதானத்தை உபயோகிக்க முடியாத அரசுப் பள்ளி மாணவர்கள்

கோவை: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாட முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கோவை: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாட முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.



கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ல் திறக்கப்பட்டது. அப்போது இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால், கோவை-பொள்ளாச்சி சாலையில் இருந்த மைதானத்தில் மாணவர்கள் விளையாடி வந்தனர்.

அந்த பகுதியில் தற்போது மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாணவர்கள் சாலையை கடந்து சென்று அந்த மைதானத்தில் விளையாடி வந்தனர். ஆனால், தற்போது மேம்பால தடுப்பு இருக்கும் காரணத்தால் அவர்களால் அந்த மைதானத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.



இது குறித்து பள்ளியின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள காரணத்தால் சாலையை கடந்து மாணவர்கள் மைதானத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பேருந்து நிலையம் வரை சென்று சாலையை கடந்து மைதானத்திற்கு அழைத்துச் செல்கிறோம்.

மேலும், விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் போது வெளிநபர்களின் பழக்கங்களை பார்க்கும் சில மாணவர்கள் அதனையே பள்ளி வளாகத்திற்குள்ளே செய்கின்றனர். இது அவர்களை மட்டுமல்லாது மற்ற மாணவர்களையும் பாதிக்கிறது. 

இந்த சூழலில், மாணவர்கள் மைதானத்திற்கு செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 1400 மாணவர்களோடு செயல்படும் ஒரே அரசுப்பள்ளி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...