புகழ்பெற்ற கருத்தரிப்பு சிகிச்சை மருத்துவர் மனீஷ் பேங்கருக்கு கௌரவமிக்க டாக்டர். பி.சி. ராய் தேசிய விருது

கோவை: நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டியின் மெடிக்கல் இயக்குநர் மருத்துவர் மனீஷ் பேங்கர், கௌரவமிக்க டாக்டர். பி.சி. ராய் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை: நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டியின் மெடிக்கல் இயக்குநர் மருத்துவர் மனீஷ் பேங்கர், கௌரவமிக்க டாக்டர். பி.சி. ராய் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மருத்துவ உலகில் இருக்கும் பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவத்தை, வளர்ச்சியை மேம்படுத்தும் திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. 

இந்திய மெடிக்கல் கவுன்சிலால் வழங்கப்படும் டாக்டர். பி.சி. ராய் தேசிய விருதானது, தேசிய அளவில் புகழ்பெற்ற மருத்துவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது. மேலும் மருத்துவ துறையில் மிக உயரிய விருதாகவும் இது கருதப்படுகிறது. 

இந்த நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற கருத்தரிப்பு சிகிச்சை மருத்துவரும், நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டி சென்டரின் தொலைநோக்கு பார்வையுள்ள மெடிக்கல் இயக்குநருமான மருத்துவர் மனீஷ் பேங்கர், கௌரவமிக்க டாக்டர். பிதான் சந்த்ரா ராய் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க இருக்கிறார். 

விருது வழங்கப்பட்டது குறித்து மருத்துவர் மனீஷ் பேங்கர் கூறுகையில், ‘’இந்தியாவில் ஐவிஃப் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துவதிலும், இச்சிகிச்சை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் உருவாக்கியிருப்பதிலும் என்னுடைய முயற்சியையும், பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் டாக்டர். பி.சி. ராய் தேசியவிருதை வழங்கி என்னை கௌரவித்திருக்கிறார்கள். 

இது எனக்கு கிடைத்திருக்கும் மாபெரும் கௌரவம். சர்வதேச அளவில், இந்தியா கருத்தரிப்பு மருத்துவத்தில், சிறப்பான நிபுணத்துவம், உயர் மருத்துவ வழிமுறைகள், சிறந்த மருத்துவ உள்கட்டமைப்புகள், மலிவான தீர்வுகளுடன் ஒரு உலகளாவிய மருத்துவ மையமாக உருவெடுக்க வேண்டுமென்பது என்னுடைய நோக்கமாகும்," என்றார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...