கோவை: நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டியின் மெடிக்கல் இயக்குநர் மருத்துவர் மனீஷ் பேங்கர், கௌரவமிக்க டாக்டர். பி.சி. ராய் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை: நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டியின் மெடிக்கல் இயக்குநர் மருத்துவர் மனீஷ் பேங்கர், கௌரவமிக்க டாக்டர். பி.சி. ராய் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ உலகில் இருக்கும் பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவத்தை, வளர்ச்சியை மேம்படுத்தும் திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய மெடிக்கல் கவுன்சிலால் வழங்கப்படும் டாக்டர். பி.சி. ராய் தேசிய விருதானது, தேசிய அளவில் புகழ்பெற்ற மருத்துவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது. மேலும் மருத்துவ துறையில் மிக உயரிய விருதாகவும் இது கருதப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற கருத்தரிப்பு சிகிச்சை மருத்துவரும், நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டி சென்டரின் தொலைநோக்கு பார்வையுள்ள மெடிக்கல் இயக்குநருமான மருத்துவர் மனீஷ் பேங்கர், கௌரவமிக்க டாக்டர். பிதான் சந்த்ரா ராய் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க இருக்கிறார்.
விருது வழங்கப்பட்டது குறித்து மருத்துவர் மனீஷ் பேங்கர் கூறுகையில், ‘’இந்தியாவில் ஐவிஃப் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துவதிலும், இச்சிகிச்சை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் உருவாக்கியிருப்பதிலும் என்னுடைய முயற்சியையும், பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் டாக்டர். பி.சி. ராய் தேசியவிருதை வழங்கி என்னை கௌரவித்திருக்கிறார்கள்.
இது எனக்கு கிடைத்திருக்கும் மாபெரும் கௌரவம். சர்வதேச அளவில், இந்தியா கருத்தரிப்பு மருத்துவத்தில், சிறப்பான நிபுணத்துவம், உயர் மருத்துவ வழிமுறைகள், சிறந்த மருத்துவ உள்கட்டமைப்புகள், மலிவான தீர்வுகளுடன் ஒரு உலகளாவிய மருத்துவ மையமாக உருவெடுக்க வேண்டுமென்பது என்னுடைய நோக்கமாகும்," என்றார்.
மருத்துவ உலகில் இருக்கும் பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவத்தை, வளர்ச்சியை மேம்படுத்தும் திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய மெடிக்கல் கவுன்சிலால் வழங்கப்படும் டாக்டர். பி.சி. ராய் தேசிய விருதானது, தேசிய அளவில் புகழ்பெற்ற மருத்துவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது. மேலும் மருத்துவ துறையில் மிக உயரிய விருதாகவும் இது கருதப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற கருத்தரிப்பு சிகிச்சை மருத்துவரும், நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டி சென்டரின் தொலைநோக்கு பார்வையுள்ள மெடிக்கல் இயக்குநருமான மருத்துவர் மனீஷ் பேங்கர், கௌரவமிக்க டாக்டர். பிதான் சந்த்ரா ராய் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க இருக்கிறார்.
விருது வழங்கப்பட்டது குறித்து மருத்துவர் மனீஷ் பேங்கர் கூறுகையில், ‘’இந்தியாவில் ஐவிஃப் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துவதிலும், இச்சிகிச்சை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் உருவாக்கியிருப்பதிலும் என்னுடைய முயற்சியையும், பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் டாக்டர். பி.சி. ராய் தேசியவிருதை வழங்கி என்னை கௌரவித்திருக்கிறார்கள்.
இது எனக்கு கிடைத்திருக்கும் மாபெரும் கௌரவம். சர்வதேச அளவில், இந்தியா கருத்தரிப்பு மருத்துவத்தில், சிறப்பான நிபுணத்துவம், உயர் மருத்துவ வழிமுறைகள், சிறந்த மருத்துவ உள்கட்டமைப்புகள், மலிவான தீர்வுகளுடன் ஒரு உலகளாவிய மருத்துவ மையமாக உருவெடுக்க வேண்டுமென்பது என்னுடைய நோக்கமாகும்," என்றார்.