அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்கக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையரிடம் மனு

கோவை: நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் மற்றும் சலுகைகளை உடனடியாக வழங்கிடக் கோரி கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பகல் இரவு நேர காவலர்கள் மாநகராட்சி துணை ஆணையரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை: நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் மற்றும் சலுகைகளை உடனடியாக வழங்கிடக் கோரி கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பகல் இரவு நேர காவலர்கள் மாநகராட்சி துணை ஆணையரிடம் இன்று மனு அளித்தனர்.



இதுகுறித்து பொது தொழிலாளர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஜி.பி., மாரிமுத்து கூறியதாவது :- மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், காவலர்களுக்கும் மாதக் கணக்கில் சம்பளம் கொடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள். பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. 



இதைப்பற்றி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. உடனடியாக அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்க வேண்டும்.

ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை மற்றும் பண்டிகைக் கால விடுமுறை அளிக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி துணை ஆணையரிடம் இன்று மனு அளித்துள்ளோம். 

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட துணை ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். மேலும், இந்தப் பிரச்சனைகளை மாநகராட்சி சரிசெய்ய தவறும் பட்சத்தில், தொழிலாளர்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும், என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...