சாய்பாபா காலனி 12-வது வார்டு பொதுமக்கள் மாநகராட்சி துணை ஆணையரிடம் மனு

கோவை : சாய்பாபா காலனி 12வது வார்டு பகுதியின் சாலைகளில் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் தோண்டப்பட்டக் குழிகளை சீரமைத்து தருமாறு மாநகராட்சி துணை ஆணையரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.


கோவை : சாய்பாபா காலனி 12வது வார்டு பகுதியின் சாலைகளில் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் தோண்டப்பட்டக் குழிகளை சீரமைத்து தருமாறு மாநகராட்சி துணை ஆணையரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். 



முன்னாள் மேயர் ஆர். வெங்கடாசலம் மற்றும் 12-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.காயத்திரி தலைமையில் பொதுமக்கள் அளித்துள்ள இந்த மனுவில், ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் குழாய் பதிப்பதற்காக சாலையை தோண்டியதால் சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு தண்ணீர் வீணாகி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

செய்தியாளர்களிடம் முன்னாள் மேயர் ஆர்.வெங்கடாசலம் கூறியதாவது :- ராமலிங்க நகர், கே.ஜி., நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குழாய் தோண்டியதில், சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. குழாயில் ஏற்பட்ட சேதத்தால் சுத்தமான நீர் பல நாட்களாக கிடைக்கவில்லை. சாக்கடைகள் சுத்தம் செய்யாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தார் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. 

எனவே, உடனடியாக பேட்ச் வொர்க் செய்து மக்கள் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். குழாய் பதிக்க சாலையை தோண்டுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ஆணையர் உறுதியளித்துள்ளார். தவறும்பட்சத்தில் மக்களை திரட்டி அரசியல் சார்பற்ற போராட்டம் நடத்தப்படும், என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...