ஆக்கிரமிக்கப்பட்ட வழித்தடத்தை மீட்டு தரக்கோரி பள்ளி மாணவன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: குனியமுத்தூர் பிள்ளையார்புரம் அருகில் பன்னாரி அம்மன் நகரில் வசித்து வருபவர் நாகேந்திரன். பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கோவை: குனியமுத்தூர் பிள்ளையார்புரம் அருகில் பன்னாரி அம்மன் நகரில் வசித்து வருபவர் நாகேந்திரன். பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களின் வீட்டிற்குச் செல்லும் மின் இணைப்பு வழிப்பாதையை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாகக் கடந்த 2010-ல் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாகவும் தற்போது மீண்டும் அந்த இடத்தில் அதிகாரிகளின் உத்தரவு பெற்று ஒப்புதலோடு வீடு கட்டி வருவதாகவும் கூறி, தங்களுக்கு இடையூறு செய்து வருவதாகக் குற்றம் சாட்டினர்.

மேலும், கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியரிடம் இது குறித்த மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, மைல்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் நாகேந்திரனின் மகன் நவநீதகிருஷ்ணன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்தார்.

பள்ளிக்குச் செல்லாமல் இங்கு வந்துள்ளாயே? என்று அங்கிருந்த போலீசார் கேட்டதற்கு, "எனது பெற்றோர் இருவருக்கும் விடுமுறை கிடைக்க பெற முடியாத காரணத்தால், கடந்த மூன்று வாரங்களாக மனு அளிக்க வந்த செல்கிறேன்." என்றார்.

தொடர்ந்து அந்த மாணவன் ஆட்சியரிடம் மனு அளித்துச் சென்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...