கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கோவை மாவட்ட அ.தி.மு.க., அவைத்தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.

முன்னதாக வால்பாறை கூட்டத்திற்கு வருகை தந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு, செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட பொள்ளாச்சி ஜெயராமன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வால்பாறை பகுதியில் கட்சிக்கு அதிக வாக்குகள் பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
.
தொடர்ந்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது கோவை மாவட்டம் அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்காக தங்களுக்கிடையே உள்ள போட்டி பிரிவுகளை தவிர்த்து ஒற்றுமையுடன் அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து இப்போதே தேர்தல் பணியை துவக்க வேண்டும். என்றார்.
மேலும் பேசிய அமைச்சர், வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடங்களை பிடித்து மத்தியில் நமது உறுப்பினர்கள் அமைச்சர்களாக ஆவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கோவை மாவட்ட அ.தி.மு.க., அவைத்தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.

முன்னதாக வால்பாறை கூட்டத்திற்கு வருகை தந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு, செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட பொள்ளாச்சி ஜெயராமன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வால்பாறை பகுதியில் கட்சிக்கு அதிக வாக்குகள் பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
.தொடர்ந்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது கோவை மாவட்டம் அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்காக தங்களுக்கிடையே உள்ள போட்டி பிரிவுகளை தவிர்த்து ஒற்றுமையுடன் அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து இப்போதே தேர்தல் பணியை துவக்க வேண்டும். என்றார்.
மேலும் பேசிய அமைச்சர், வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடங்களை பிடித்து மத்தியில் நமது உறுப்பினர்கள் அமைச்சர்களாக ஆவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.