திருப்பூர்: பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
திருப்பூர்: பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
இதனை அடுத்து சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்கள் நால்வரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சுப்பிரமணி, சதாம் உசேன், குணா மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய நால்வரும் கரூர், சேலம் காட்பாடி ஆகிய இடங்களில் மூன்று கார்களையும், லாரியையும் திருடியது தெரியவந்தது.
மேலும், மங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 63 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 சவரன் தங்க நகைகள் திருடியதும் தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்களிடமிருந்து கார் மற்றும் ஏழு சவரன் நகைகளை மங்கலம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.