பல்லடம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது

திருப்பூர்: பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


திருப்பூர்: பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

இதனை அடுத்து சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்கள் நால்வரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில், சுப்பிரமணி, சதாம் உசேன், குணா மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய நால்வரும் கரூர், சேலம் காட்பாடி ஆகிய இடங்களில் மூன்று கார்களையும், லாரியையும் திருடியது தெரியவந்தது.

மேலும், மங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 63 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 சவரன் தங்க நகைகள் திருடியதும் தெரியவந்தது.



இதனை அடுத்து அவர்களிடமிருந்து கார் மற்றும் ஏழு சவரன் நகைகளை மங்கலம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...