தமிழகம், கேரள மக்களிடையே ஏற்பட்டுள்ள சமூக வலைதள வார்த்தைப் போரை கைவிடும்படி பொதுமக்களுக்கு கேரள பிரபலங்கள் மற்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகம், கேரள மக்களிடையே ஏற்பட்டுள்ள சமூக வலைதள வார்த்தைப் போரை கைவிடும்படி பொதுமக்களுக்கு கேரள பிரபலங்கள் மற்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோக்களின் மூலம் தமிழகம், கேரள மக்களிடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சகோதரத்துவத்தை கெடுக்கும் வகையிலான வீடியோக்களை பதிவிட வேண்டாம் என கேரள மக்களுக்கு அம்மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளத்தில் மிதந்த கேரளாவுக்கு வண்டி, வண்டியாக ஓயாமல் தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால், தமிழகர்களின் சகோதர உணர்வை பாராட்டி மலையாள தேசத்தை சேர்ந்த பலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டனர். பதிலுக்கு, தமிழர்களும் பதில் வீடியோக்களை போட்டனர். அதுமட்டுமில்லாமல், #KeralaLovesTamilNadu,#வந்தாரை_வாழ_வைக்கும்_தமிழ்_நாடு, #TogetherWeShallOvercome, #WeLoveTamilNadu போன்ற ஹேஸ்டேக்குகளும் சமூகவலைதளங்களை பறக்க விட்டன.
இந்த நிலையில், இந்த சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் வகையில், கேரளாவை சேர்ந்த சிலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விரோதிகள் எனக் கூறியும், வசைபாடியும் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பதிலுக்கு வீடியோக்கள் மூலமாகவும், கமெண்டுகள் மூலமாகவும் சண்டையிட்டனர். தொடர்ந்து, பலர் வார்த்தைப் போரில் ஈடுபட்டதால், சகோதரத்துவம் மறக்கடிக்கப்பட்டது.
எனவே, சமூக வலைதளங்களில் ஒருசிலரின் தனிப்பட்ட பிரச்சனைகளால், இரு மாநிலங்களிடையே பகைமையை உருவாக்க வேண்டாம் என கேரளாவைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வி.டி., பல்ராம், நடிகர் ரீமா கல்லிங்கால், பத்திரிக்கையாளர் சஹாயினா நஃபீஸா உள்ளிட்டோர் அமைதியை நிலைநாட்ட உதவுமாறு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோல, போலீசாரும், அடையாளம் தெரியாத நபர்களுக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோக்களின் மூலம் தமிழகம், கேரள மக்களிடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சகோதரத்துவத்தை கெடுக்கும் வகையிலான வீடியோக்களை பதிவிட வேண்டாம் என கேரள மக்களுக்கு அம்மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளத்தில் மிதந்த கேரளாவுக்கு வண்டி, வண்டியாக ஓயாமல் தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால், தமிழகர்களின் சகோதர உணர்வை பாராட்டி மலையாள தேசத்தை சேர்ந்த பலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டனர். பதிலுக்கு, தமிழர்களும் பதில் வீடியோக்களை போட்டனர். அதுமட்டுமில்லாமல், #KeralaLovesTamilNadu,#வந்தாரை_வாழ_வைக்கும்_தமிழ்_நாடு, #TogetherWeShallOvercome, #WeLoveTamilNadu போன்ற ஹேஸ்டேக்குகளும் சமூகவலைதளங்களை பறக்க விட்டன.
இந்த நிலையில், இந்த சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் வகையில், கேரளாவை சேர்ந்த சிலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விரோதிகள் எனக் கூறியும், வசைபாடியும் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பதிலுக்கு வீடியோக்கள் மூலமாகவும், கமெண்டுகள் மூலமாகவும் சண்டையிட்டனர். தொடர்ந்து, பலர் வார்த்தைப் போரில் ஈடுபட்டதால், சகோதரத்துவம் மறக்கடிக்கப்பட்டது.
எனவே, சமூக வலைதளங்களில் ஒருசிலரின் தனிப்பட்ட பிரச்சனைகளால், இரு மாநிலங்களிடையே பகைமையை உருவாக்க வேண்டாம் என கேரளாவைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வி.டி., பல்ராம், நடிகர் ரீமா கல்லிங்கால், பத்திரிக்கையாளர் சஹாயினா நஃபீஸா உள்ளிட்டோர் அமைதியை நிலைநாட்ட உதவுமாறு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோல, போலீசாரும், அடையாளம் தெரியாத நபர்களுக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.