நீலகிரி : உதகை அருகே 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
நீலகிரி: உதகை அருகே 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
உதகையில் தனியார் பள்ளியில் படித்து வரும் காவியா என்பவரை சந்தித்து விட்டு சந்தியா, ராஜசேகர், வைஷ்ணவி மற்றும் வரலட்சுமி ஆகியோர் காரில் சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கெந்தளா என்ற பகுதியின் வளைவில் கார் திரும்பும் போது, நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்த கார், 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த சந்தியா (30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், ராஜசேகர், வைஷ்ணவி மற்றும் வரலட்சுமி ஆகியோரை பலத்த காயங்களுடன் அருகில் இருந்தவர்கள் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.