திருப்பூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில், 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில், 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டமானது, கிராமப்புறங்களில் இளைஞர்களிடையே வீர விளையாட்டாகவும், தற்காப்பு கலையாகவும் திகழ்ந்து வருகிறது இந்த நிலையில், சிலம்பாட்ட விளையாட்டிற்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாநில சிலம்பாட்ட கழகத்தின் தலைவராக ராஜேந்திரன் .ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டு தற்போது மாவட்ட வாரியாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.



இதன் ஒருபகுதியாக திருப்பூர் பார்க் பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் இன்றும், நாளையும் நடைபெற்று வருகிறது. தொடக்க நாளான இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், போட்டிகளை மாவட்ட தலைவர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். திருப்பூர், உடுமலைபேட்டை, காங்கேயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். 



வயதின் அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும், இப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், இந்த மாத இறுதியில் வேலூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...