கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பெள்ளாதி கிராம ஊராட்சியில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பெள்ளாதி கிராம ஊராட்சியில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் மத்திய கூட்டுறவு வங்கியின் விஜிலன்ஸ் பிரிவு அதிகாரிகள் தீடீர் ஆய்வு மேற்க்கொண்டனர்.
இதில் பெள்ளாதி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கான கடன் வழங்கியதாக காட்டப்பட்டுள்ள கணக்கு, கிராம மக்களிடம் பெற்ற டெபாசிட் தொகை விபரம், தங்க நகைகளுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ள தொகை மற்றும் நகைகளின் இருப்பு போன்ற பலவற்றிலும் மோசடிகள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டது.
இதற்கு போலி ரசீதுகள் பயன்படுத்தபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து முறைகேடுகள் தொடர்பாக இக்கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மனோகரனை தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையின் போதும் இந்த வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் சட்டத்திற்கு புறம்பான பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய வங்கி அதிகாரிகளின் ஆய்வையடுத்து பல நாட்கள் இக்கூட்டுறவு சங்கம் மூடி கிடந்ததோடு, இன்று வரை ஒரு மாத காலமாக இதன் செயலாளர் மனோகரன் வராமல் தலைமறைவாக இருப்பது பெள்ளாதி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவசர தேவைக்காக தாங்கள் போட்டு வைத்திருந்த வைப்பு தொகையினை திருப்பி கேட்டாலோ, அடமானமாக தாங்கள் வைத்திருந்த தங்க நகைகளை பணம் செலுத்தி திரும்ப கேட்டாலோ, உயர் அதிகாரிகளின் ஆய்வு முழுமை பெற்ற பின்னரே உரிய முறையில் கணக்கிட்டு தர இயலும், அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என தெரியாது என தற்போது பணியில் உள்ள பணியாளர்கள் கூறுவதால் செய்வதறியாது கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர் இப்பகுதி மக்கள்.

தங்களது வைப்பு தொகை மற்றும் நகைகளின் நிலை என்ன? என்பது குறித்து சரியான விளக்கம் அளிக்கக்கோரி வேளாண்மை கடன் சங்கத்தை இன்று முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சனை குறித்து கூட்டுறுவு சங்க உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
சுமார் இரண்டு கோடிக்கும் மேல் கையாடல் நடைபெற்றுள்ளதாக வேதனை தெரிவிக்கும் பெள்ளதி கிராம மக்கள், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதோடு, தங்களின் பணம் மற்றும் நகை திரும்ப கிடைக்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் மத்திய கூட்டுறவு வங்கியின் விஜிலன்ஸ் பிரிவு அதிகாரிகள் தீடீர் ஆய்வு மேற்க்கொண்டனர்.
இதில் பெள்ளாதி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கான கடன் வழங்கியதாக காட்டப்பட்டுள்ள கணக்கு, கிராம மக்களிடம் பெற்ற டெபாசிட் தொகை விபரம், தங்க நகைகளுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ள தொகை மற்றும் நகைகளின் இருப்பு போன்ற பலவற்றிலும் மோசடிகள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டது.
இதற்கு போலி ரசீதுகள் பயன்படுத்தபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து முறைகேடுகள் தொடர்பாக இக்கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மனோகரனை தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையின் போதும் இந்த வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் சட்டத்திற்கு புறம்பான பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய வங்கி அதிகாரிகளின் ஆய்வையடுத்து பல நாட்கள் இக்கூட்டுறவு சங்கம் மூடி கிடந்ததோடு, இன்று வரை ஒரு மாத காலமாக இதன் செயலாளர் மனோகரன் வராமல் தலைமறைவாக இருப்பது பெள்ளாதி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவசர தேவைக்காக தாங்கள் போட்டு வைத்திருந்த வைப்பு தொகையினை திருப்பி கேட்டாலோ, அடமானமாக தாங்கள் வைத்திருந்த தங்க நகைகளை பணம் செலுத்தி திரும்ப கேட்டாலோ, உயர் அதிகாரிகளின் ஆய்வு முழுமை பெற்ற பின்னரே உரிய முறையில் கணக்கிட்டு தர இயலும், அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என தெரியாது என தற்போது பணியில் உள்ள பணியாளர்கள் கூறுவதால் செய்வதறியாது கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர் இப்பகுதி மக்கள்.

தங்களது வைப்பு தொகை மற்றும் நகைகளின் நிலை என்ன? என்பது குறித்து சரியான விளக்கம் அளிக்கக்கோரி வேளாண்மை கடன் சங்கத்தை இன்று முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சனை குறித்து கூட்டுறுவு சங்க உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
சுமார் இரண்டு கோடிக்கும் மேல் கையாடல் நடைபெற்றுள்ளதாக வேதனை தெரிவிக்கும் பெள்ளதி கிராம மக்கள், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதோடு, தங்களின் பணம் மற்றும் நகை திரும்ப கிடைக்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.