கோவை: வரும் அக்டோபர் மாதம் முதல் டெல்லி-கோவைக்கு நான்-ஸ்டாப் விமானங்களை இயக்க ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை: வரும் அக்டோபர் மாதம் முதல் டெல்லி-கோவைக்கு நான்-ஸ்டாப் விமானங்களை இயக்க ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முன்னதாக இந்த சேவையை ஜெட் ஏர்வேஸ் அறிவித்திருந்த நிலையில், அக்டோபர் 8-ம் தேதி முதல் இந்த சேவை இயங்கும் என்று ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது.
அதன்படி, காலை 7.50 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் விமானம், 11 மணிக்கு கோவை வந்தடையும்.
மீண்டும், 11.30 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு மதியம் 2.40 மணிக்கு டெல்லி சென்றடையும்.
மேலும், பெங்களூருக்கு இரண்டு நான்-ஸ்டாப் விமானங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அது, கோவையில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.10 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.
மற்றொரு விமானம் மாலை 5.45-க்கு புறப்பட்டு 6.40-க்கு சென்றடையும்.
இந்த புதிய சேவைகளால் வணிகர்கள் மற்றும் பயணிகளின் நேரங்கள் சேமிக்கப்படும் என்றும், இது சுலபமாக பயணிக்கப் பயன்படும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக இந்த சேவையை ஜெட் ஏர்வேஸ் அறிவித்திருந்த நிலையில், அக்டோபர் 8-ம் தேதி முதல் இந்த சேவை இயங்கும் என்று ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது.
அதன்படி, காலை 7.50 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் விமானம், 11 மணிக்கு கோவை வந்தடையும்.
மீண்டும், 11.30 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு மதியம் 2.40 மணிக்கு டெல்லி சென்றடையும்.
மேலும், பெங்களூருக்கு இரண்டு நான்-ஸ்டாப் விமானங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அது, கோவையில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.10 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.
மற்றொரு விமானம் மாலை 5.45-க்கு புறப்பட்டு 6.40-க்கு சென்றடையும்.
இந்த புதிய சேவைகளால் வணிகர்கள் மற்றும் பயணிகளின் நேரங்கள் சேமிக்கப்படும் என்றும், இது சுலபமாக பயணிக்கப் பயன்படும் என்றும் கூறப்படுகிறது.