தமிழகத்தில் இன்று முதல் உயர்ந்தது சுங்கச்சாவடி கட்டணம் : லாரி உரிமையாளர்கள் கண்டனம்

கோவை : தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 5 முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு லாரி உரிமையாளர் சங்கங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

கோவை : தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 5 முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு லாரி உரிமையாளர் சங்கங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் உள்ள 42 சுங்கச்சாவடிகளில் 14 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 5 முதல் 15 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆம்னி பேருந்துகள் கட்டணம், லாரி வாடகை உயர்வு, இதனால் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

சுங்க கட்டணம் உயர்வை கண்டித்தும், ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும், கடந்த ஜுன் மாதம் 20 தேதி முதல் எட்டு நாட்களுக்கு லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த போராட்டம் நடைபெற்றும் கூட தற்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

இது குறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கலியபெருமாள் கூறுகையில், "இவ்வளவு போராட்டம் நடத்தியும் எங்களை மதிக்காமல் மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இதனால், கோவையில் மட்டும் 15 ஆயிரம் லாரிகள் பாதிக்கப்படும். பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக மீண்டும் அகில இந்திய அளவில் வரும் 21 -ம் தேதி அன்று டெல்லியில் அலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், நல்ல முடிவு எடுக்கப்படும்," என்றார்.

இந்த கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கம் என்றாலும், இதனால் லாரி உரிமையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தனராஜ் கூறுகையில், " இந்த கட்டண உயர்வு வழக்கமான ஒன்று என்றாலும், இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால், உரிமையாளர்கள் உட்பட லாரி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாதிக்கும். சுங்கச்சாவடி கட்டணங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் நாங்கள் கூறியது போல், ஒன் டைம் செட்டில்மேண்ட் செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்," என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...