கோவை : தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 5 முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு லாரி உரிமையாளர் சங்கங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
கோவை : தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 5 முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு லாரி உரிமையாளர் சங்கங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 42 சுங்கச்சாவடிகளில் 14 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 5 முதல் 15 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆம்னி பேருந்துகள் கட்டணம், லாரி வாடகை உயர்வு, இதனால் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
சுங்க கட்டணம் உயர்வை கண்டித்தும், ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும், கடந்த ஜுன் மாதம் 20 தேதி முதல் எட்டு நாட்களுக்கு லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த போராட்டம் நடைபெற்றும் கூட தற்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
இது குறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கலியபெருமாள் கூறுகையில், "இவ்வளவு போராட்டம் நடத்தியும் எங்களை மதிக்காமல் மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இதனால், கோவையில் மட்டும் 15 ஆயிரம் லாரிகள் பாதிக்கப்படும். பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக மீண்டும் அகில இந்திய அளவில் வரும் 21 -ம் தேதி அன்று டெல்லியில் அலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், நல்ல முடிவு எடுக்கப்படும்," என்றார்.
இந்த கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கம் என்றாலும், இதனால் லாரி உரிமையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தனராஜ் கூறுகையில், " இந்த கட்டண உயர்வு வழக்கமான ஒன்று என்றாலும், இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால், உரிமையாளர்கள் உட்பட லாரி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாதிக்கும். சுங்கச்சாவடி கட்டணங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் நாங்கள் கூறியது போல், ஒன் டைம் செட்டில்மேண்ட் செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்," என்றார்.
தமிழகத்தில் உள்ள 42 சுங்கச்சாவடிகளில் 14 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 5 முதல் 15 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆம்னி பேருந்துகள் கட்டணம், லாரி வாடகை உயர்வு, இதனால் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
சுங்க கட்டணம் உயர்வை கண்டித்தும், ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும், கடந்த ஜுன் மாதம் 20 தேதி முதல் எட்டு நாட்களுக்கு லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த போராட்டம் நடைபெற்றும் கூட தற்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
இது குறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கலியபெருமாள் கூறுகையில், "இவ்வளவு போராட்டம் நடத்தியும் எங்களை மதிக்காமல் மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இதனால், கோவையில் மட்டும் 15 ஆயிரம் லாரிகள் பாதிக்கப்படும். பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக மீண்டும் அகில இந்திய அளவில் வரும் 21 -ம் தேதி அன்று டெல்லியில் அலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், நல்ல முடிவு எடுக்கப்படும்," என்றார்.
இந்த கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கம் என்றாலும், இதனால் லாரி உரிமையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தனராஜ் கூறுகையில், " இந்த கட்டண உயர்வு வழக்கமான ஒன்று என்றாலும், இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால், உரிமையாளர்கள் உட்பட லாரி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாதிக்கும். சுங்கச்சாவடி கட்டணங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் நாங்கள் கூறியது போல், ஒன் டைம் செட்டில்மேண்ட் செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்," என்றார்.