வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரத்தை தற்போது காணலாம்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரத்தை தற்போது காணலாம்.

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையினால், நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 5 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 4 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார் அருவிக்கு வரும் நீரின் அளவு 596 கனஅடியாகும். அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீரார் அணையில் மழையின் அளவு 5 மி.மீ., ஆகும். அணைக்கு விநாடிக்கு 189 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அருவியில் இருந்து 200.69 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

சோலையாறு அணையில் 1 மி.மீ., மழை பெய்துள்ளது. நீர்மட்டம் 160.53 (160) அடியாக உள்ளது. நீர் இருப்பு 5077.03 மில்லியன் கன அடியாகும். விநாடிக்கு 1,502.08 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி, மின் உற்பத்திக்காக பவர் ஹவுஸ் 1-ல் இருந்து 395.37 கனஅடி நீரும், பவர் ஹவுஸ் 2-ல் இருந்து 618.28 கனஅடி நீரும், சேடல் வழியாக 173.73 கனஅடி நீரும் என மொத்தம் 1,187.38கனஅடி நீர் பரம்பிகுளம் அணைக்கு செல்கிறது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...