கோவை: கோவை ரவுண்ட் டேபிள் எண் 9 மற்றும் கோவை லேடிஸ் சர்கிள் எண் 1 இணைந்து கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே உள்ள அரசுப் பள்ளிக்கு இலவச வகுப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளன.
கோவை: கோவை ரவுண்ட் டேபிள் எண் 9 மற்றும் கோவை லேடிஸ் சர்கிள் எண் 1 இணைந்து கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே உள்ள அரசுப் பள்ளிக்கு இலவச வகுப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளன.

மொத்தம் 600 மாணவர்களை கொண்டுள்ள மாதவராயபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தற்போது மேலும் 3 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனை 50 -வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கோவை லேடிஸ் சர்கிள் எண் 1-ஐச் சேர்ந்த கிறிஸ்டோபர் அர்விந்த், தீபிகா சிங் ஆகியோர் திறந்து வைத்தனர். ஏற்கனவே, கடந்த ஆண்டு கோவை ரவுண்ட் டேபிள் எண் 9 மற்றும் கோவை லேடிஸ் சர்கிள் எண் 1 இணைந்து 6 வகுப்பறைகளை அந்தப் பள்ளிக்கு இலவசமாகக் கட்டிக் கொடுத்துள்ளன.
கடந்த 50 ஆண்டுகளாக கிராமப்புறங்களில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் 25-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை கோவை ரவுண்ட் டேபிள் எண் 9 கட்டிக் கொடுத்துள்ளது. இதனுடன் இணைந்து, கோவை லேடிஸ் சர்கிள் எண் 1-ம் பெண்களுக்கு தேவையான கழிப்பறைகள், தனி மருத்துவ மையம், புத்தகங்கள், சீருடைகளை வழங்கி வருகிறது.

மொத்தம் 600 மாணவர்களை கொண்டுள்ள மாதவராயபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தற்போது மேலும் 3 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனை 50 -வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கோவை லேடிஸ் சர்கிள் எண் 1-ஐச் சேர்ந்த கிறிஸ்டோபர் அர்விந்த், தீபிகா சிங் ஆகியோர் திறந்து வைத்தனர். ஏற்கனவே, கடந்த ஆண்டு கோவை ரவுண்ட் டேபிள் எண் 9 மற்றும் கோவை லேடிஸ் சர்கிள் எண் 1 இணைந்து 6 வகுப்பறைகளை அந்தப் பள்ளிக்கு இலவசமாகக் கட்டிக் கொடுத்துள்ளன.
கடந்த 50 ஆண்டுகளாக கிராமப்புறங்களில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் 25-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை கோவை ரவுண்ட் டேபிள் எண் 9 கட்டிக் கொடுத்துள்ளது. இதனுடன் இணைந்து, கோவை லேடிஸ் சர்கிள் எண் 1-ம் பெண்களுக்கு தேவையான கழிப்பறைகள், தனி மருத்துவ மையம், புத்தகங்கள், சீருடைகளை வழங்கி வருகிறது.