கோவையில் கூலி தொழிலாளி மரணத்தில் மர்மம் : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவை: கோவையில் கூலி தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: கோவையில் கூலி தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் கலிக்கநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் அதேபகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கு சொந்தமான ரேவதி பந்தல்நிலையத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 29-ம் தேதி வேலைக்கு சென்ற மணிகண்டன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால், அவருடன் பணிபுரிந்தவர்களிடம் உறவினர்கள் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது, மணிகண்டன் குடித்து விட்டு போதையில் கிடப்பதாகவும், பந்தலில் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும் மாற்றி மாற்றி கூறியுள்ளனர். 

உடனே நிகழ்விடத்திற்கு சென்று பார்த்த போது, தலையில் காயத்துடன் மணிகண்டன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மணிகண்டன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது முதலாளி வேலுசாமி உள்ளிட்டோர் அடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்திருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனிடையே, வேலுசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். ஆனால், தொண்டாமுத்தூர் போலீசார் வேலுசாமி தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மணிகண்டனின் உறவினர்கள் வலியுறுத்தினர்.

இளைஞரின் மர்ம மரணம் தொடர்பாக சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...