கோவை : உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்சில் நீண்ட கால அடிப்படையிலான புதிய இன்சூரன்ஸ் விதிமுறை நாளை முதல் அமலாக உள்ளது.
கோவை : உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்சில் நீண்ட கால அடிப்படையிலான புதிய இன்சூரன்ஸ் விதிமுறை நாளை முதல் அமலாக உள்ளது.
மோட்டார் வாகனச் சட்டப்படி மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயம். இந்த இன்சூரன்ஸ் கட்டாவிட்டால் விபத்து ஏற்படும் போது பாதிக்கப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதையடுத்து, இந்த தொகையை வாகனங்கள் விற்பனை செய்யும்போதே மொத்தமாக வசூலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மூன்றாம் நபர் இன்சூரன்சில் நீண்ட கால அடிப்படையிலான புதிய இன்சூரன்ஸ் விதிமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த நடைமுறையால், வாகனங்களின் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இன்சூரன்ஸ் முகவர் கோபால் கூறுகையில், "இந்த திட்டம் நான்கு சக்கர வாகனங்களுக்கு 3 ஆண்டுகளாகவும், இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளாகவும் இருக்கும். 1,000 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் ஆகும். 1,000 முதல் 1,500 சிசி வரையிலான என்ஜின் திறன் கொண்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு தொகை ரூ. 9 ஆயிரத்திற்கும் மேலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
1,500 சி.சி.க்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.24 ஆயிரத்திற்கும் மேல் ஆகும். அதேபோல, இருசக்கர வாகனங்களுக்கு, 75 சிசி இன்ஜின் திறனுக்கு குறைவான வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ. 1,000-க்கு மேலாகவும், 75 முதல் 150 சிசி இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு ரூ. 3,000-க்கு மேலாகவும், 150 முதல் 350 சிசி கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 5,000-க்கு மேலாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 350 சிசிக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.13,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டணம் விலை உயரவில்லை மாறாக 3 ஆண்டுகள் கட்டணத்தை ஒரே தவணையாக கட்டவுள்ளோம். இதனால், நன்மையே. ஆண்டுக்கு ஒருமுறை இன்சூரன்ஸ் கட்டுவது மறந்துவிடும் இந்த சூழ்நிலையில் இந்த திட்டம் கைகொடுக்கும்" என்றார்.
மூன்றாம் நபர் காப்பீடு திட்டம் வணிக ரீதியாக செயல்படும் வாகனங்களுக்கு கிடையாது என்பதால் லாரி, ஆட்டோ, டெம்போ போன்ற வாகனங்களின் இன்சூரன்ஸ் விலையில் மாற்றம் இல்லை. அதேசமயம், புதிதாக இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும் நபர்களை இது பாதிக்கும்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வாகன ஓட்டி நியூட்டன் என்பவர் கூறுகையில், "இன்சூரன்ஸ் என்பது அரசாங்கம் கையில் மட்டுமே இருக்க வேண்டும். அது தனியார் கையில் இருந்தால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது. புதிதாக வாகனம் எடுக்கும் போது வாகனங்களின் விலையும் உயரும். வாகனம் வாங்குவோர் ஏற்கனவே பெரும்பாலும் கடனாக தான் வாங்குகிறார்கள். இதில், இது வேறு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் போய்விடும்," என்றார்.
இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில் "வாகன ஒட்டிகள் இன்சூரன்ஸ் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதற்காக மட்டும் தான் இன்சூரன்ஸ் கட்டுகிறார்கள். விலை உயர்வு இப்படி கூடிக்கொண்டே போனால் இன்சூரன்ஸ் கட்டாமல் அபராதமே கட்டிவிடலாம் என்ற மனநிலைக்கு வாகன ஒட்டிகள் வந்து விடுவார்கள். இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்படப்போவது மக்களே," என்றார்.
"மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒர் ஆண்டு கட்ட வேண்டியதை முன்கூட்டியே மூன்று ஆண்டுகளுக்கு கட்டுவதால் நன்மை தான்" என தனியார் வாகனங்கள் விற்பனை செய்யப்படும் நிறுவன ஊழியர் ஒருவர் கூறினார்.
மோட்டார் வாகனச் சட்டப்படி மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயம். இந்த இன்சூரன்ஸ் கட்டாவிட்டால் விபத்து ஏற்படும் போது பாதிக்கப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதையடுத்து, இந்த தொகையை வாகனங்கள் விற்பனை செய்யும்போதே மொத்தமாக வசூலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மூன்றாம் நபர் இன்சூரன்சில் நீண்ட கால அடிப்படையிலான புதிய இன்சூரன்ஸ் விதிமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த நடைமுறையால், வாகனங்களின் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இன்சூரன்ஸ் முகவர் கோபால் கூறுகையில், "இந்த திட்டம் நான்கு சக்கர வாகனங்களுக்கு 3 ஆண்டுகளாகவும், இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளாகவும் இருக்கும். 1,000 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் ஆகும். 1,000 முதல் 1,500 சிசி வரையிலான என்ஜின் திறன் கொண்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு தொகை ரூ. 9 ஆயிரத்திற்கும் மேலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
1,500 சி.சி.க்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.24 ஆயிரத்திற்கும் மேல் ஆகும். அதேபோல, இருசக்கர வாகனங்களுக்கு, 75 சிசி இன்ஜின் திறனுக்கு குறைவான வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ. 1,000-க்கு மேலாகவும், 75 முதல் 150 சிசி இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு ரூ. 3,000-க்கு மேலாகவும், 150 முதல் 350 சிசி கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 5,000-க்கு மேலாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 350 சிசிக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.13,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டணம் விலை உயரவில்லை மாறாக 3 ஆண்டுகள் கட்டணத்தை ஒரே தவணையாக கட்டவுள்ளோம். இதனால், நன்மையே. ஆண்டுக்கு ஒருமுறை இன்சூரன்ஸ் கட்டுவது மறந்துவிடும் இந்த சூழ்நிலையில் இந்த திட்டம் கைகொடுக்கும்" என்றார்.
மூன்றாம் நபர் காப்பீடு திட்டம் வணிக ரீதியாக செயல்படும் வாகனங்களுக்கு கிடையாது என்பதால் லாரி, ஆட்டோ, டெம்போ போன்ற வாகனங்களின் இன்சூரன்ஸ் விலையில் மாற்றம் இல்லை. அதேசமயம், புதிதாக இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும் நபர்களை இது பாதிக்கும்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வாகன ஓட்டி நியூட்டன் என்பவர் கூறுகையில், "இன்சூரன்ஸ் என்பது அரசாங்கம் கையில் மட்டுமே இருக்க வேண்டும். அது தனியார் கையில் இருந்தால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது. புதிதாக வாகனம் எடுக்கும் போது வாகனங்களின் விலையும் உயரும். வாகனம் வாங்குவோர் ஏற்கனவே பெரும்பாலும் கடனாக தான் வாங்குகிறார்கள். இதில், இது வேறு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் போய்விடும்," என்றார்.
இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில் "வாகன ஒட்டிகள் இன்சூரன்ஸ் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதற்காக மட்டும் தான் இன்சூரன்ஸ் கட்டுகிறார்கள். விலை உயர்வு இப்படி கூடிக்கொண்டே போனால் இன்சூரன்ஸ் கட்டாமல் அபராதமே கட்டிவிடலாம் என்ற மனநிலைக்கு வாகன ஒட்டிகள் வந்து விடுவார்கள். இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்படப்போவது மக்களே," என்றார்.
"மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒர் ஆண்டு கட்ட வேண்டியதை முன்கூட்டியே மூன்று ஆண்டுகளுக்கு கட்டுவதால் நன்மை தான்" என தனியார் வாகனங்கள் விற்பனை செய்யப்படும் நிறுவன ஊழியர் ஒருவர் கூறினார்.