தேசத்துரோக சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம் : பொதுமக்களிடம் கருத்து கேட்கும் இந்திய சட்ட ஆணையம்

தேசத்துரோக சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாக இந்திய சட்ட ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

தேசத்துரோக சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாக இந்திய சட்ட ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. 

பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவ்லகா, இடதுசாரி சிந்தனையாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோர் மீது தேசத்துரோக சட்டம் பதியப்பட்டு, மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தற்போது, அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேசத்துரோக சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாக இந்திய சட்ட ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சட்ட ஆணையம் கூறியிருப்பதாவது :- அரசுக்கு எதிராக முரண்படுதலை தேசத்துரோகமாக கருத முடியாது. எதிர்கருத்துகள் மூலமே மக்கள் தங்களது விரக்தியை வெளிப்படுத்த முடியும். தேசத்துரோகம் என்பதை முறையாக ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பேச்சுரிமை கொடுத்துவிட்டு, பேசினால் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தல் முரணானது, இவ்வாறு தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்வது குறித்து பொதுமக்களின் கருத்துக்களை தெரிவிக்கவும் இந்திய சட்ட ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...