முதலமைச்சரைக் கண்டித்து கோவையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறித்து விமர்சனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறித்து விமர்சனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த மாதம் சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க., கட்சி கூட்டத்தில், ஆசிரியர்களின் ஊதிய வரலாற்றைப் பற்றி அறியாமல் தரக்குறைவாக பேசியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 



இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, வருமான வரியை அரசு ஊழியர்கள் முறையாக செலுத்தி வருகிறோம், ஊழலில் ஈடுபட்டு சிறைக்கு செல்லவில்லை, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை எனக் கூறி முதலமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், முதலமைச்சர் தனது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் ,ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார் கூறியதாவது :- இந்திய அரசியில் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் ரகசிய பிரமாணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆசிரியர்கள் ஊதிய வரலாற்றைப் பற்றி அறியாமல் தரக் குறைவாக பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதனை வாபஸ் பெற வேண்டும். மேலும், தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது மத்திய அரசு வழங்கிட கூடிய புள்ளிகளில் இருந்து போராடி பெற்றது, என்றார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...