கோவை : ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது, 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு முறையான ஊதியம், ஓய்வூதியம் வழங்கவும், பணிக்கொடையாக ஒய்வு பெறுபவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். தமிழக அரசு சத்துணவு ஊழியர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதாகக் கூறி மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்குவதை கண்டிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அரசு அதிகாரிகள் பள்ளி குழந்தைகளுக்கு 44 கிராம் எடையுள்ள முட்டை வழங்க சத்துணவு ஊழியர்களை வற்புறுத்துவதாகக் கூறும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், ஆனால், 20 கிராம் எடையுள்ள முட்டை மட்டுமே பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்ட அதிகாரிகளால் வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டினர்.
இந்தப் போராட்டத்தின் போது, 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு முறையான ஊதியம், ஓய்வூதியம் வழங்கவும், பணிக்கொடையாக ஒய்வு பெறுபவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். தமிழக அரசு சத்துணவு ஊழியர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதாகக் கூறி மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்குவதை கண்டிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அரசு அதிகாரிகள் பள்ளி குழந்தைகளுக்கு 44 கிராம் எடையுள்ள முட்டை வழங்க சத்துணவு ஊழியர்களை வற்புறுத்துவதாகக் கூறும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், ஆனால், 20 கிராம் எடையுள்ள முட்டை மட்டுமே பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்ட அதிகாரிகளால் வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டினர்.