கோவை: கோவையில் உள்ள குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜுன் மேவாலிடம் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மனு கொடுத்துள்ளன.
கோவை: கோவையில் உள்ள குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜுன் மேவாலிடம் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மனு கொடுத்துள்ளன.

கோவையில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுதுளி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, சி.யூ.பி.இ., இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு குழு, சிறுவாணி விழுதுகள் மற்றும் குறிச்சிகுளம் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜுன் மேவால் பங்கேற்று கோவையில் உள்ள குளங்கள் குறித்து கலந்துரையாடினார்.
அப்போது, கடந்த சில நாட்களாக கழிவுநீரால் கோவையில் உள்ள குளங்கள் அடையும் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமைச்சர் அர்ஜுன் மேவாலிடம் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மனு ஒன்றை கொடுத்தனர். மேலும், ஆரம்பத்தில் கோவை மாநகருக்குட்பட்ட குளங்களில் மட்டுமே பாதிப்பு இருந்து வந்ததாகவும், ஆனால், தற்போது புறநகர் பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளும் கழிவுநீரால் மாசடைந்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, நிதி ஒதுக்கீடு செய்து, குளங்களைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், மோசமான நிலையில் உள்ள மதகுகள் மற்றும் தடுப்புகளினால், மழை காலங்களில் சேமிக்க வேண்டிய தண்ணீரில் கழிவுகள் லந்து செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதோடு, நீர்நிலைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் அர்ஜுன் மேவாலிடம் தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் அர்ஜுன் மேவால், நீலாம்பூர் அருகே உள்ள அச்சன்குளத்தை பார்வையிட்டார்.

கோவையில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுதுளி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, சி.யூ.பி.இ., இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு குழு, சிறுவாணி விழுதுகள் மற்றும் குறிச்சிகுளம் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜுன் மேவால் பங்கேற்று கோவையில் உள்ள குளங்கள் குறித்து கலந்துரையாடினார்.
அப்போது, கடந்த சில நாட்களாக கழிவுநீரால் கோவையில் உள்ள குளங்கள் அடையும் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமைச்சர் அர்ஜுன் மேவாலிடம் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மனு ஒன்றை கொடுத்தனர். மேலும், ஆரம்பத்தில் கோவை மாநகருக்குட்பட்ட குளங்களில் மட்டுமே பாதிப்பு இருந்து வந்ததாகவும், ஆனால், தற்போது புறநகர் பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளும் கழிவுநீரால் மாசடைந்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, நிதி ஒதுக்கீடு செய்து, குளங்களைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், மோசமான நிலையில் உள்ள மதகுகள் மற்றும் தடுப்புகளினால், மழை காலங்களில் சேமிக்க வேண்டிய தண்ணீரில் கழிவுகள் லந்து செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதோடு, நீர்நிலைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் அர்ஜுன் மேவாலிடம் தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் அர்ஜுன் மேவால், நீலாம்பூர் அருகே உள்ள அச்சன்குளத்தை பார்வையிட்டார்.