வரி கட்டாத கடையின் முன்பு குப்பைத் தொட்டியை வைத்த கோவை மாநகராட்சி

கோவை: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை கட்டாமல், தொடர்ந்து செயல்பட்டு வந்த இரண்டு கடைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை கட்டாமல், தொடர்ந்து செயல்பட்டு வந்த இரண்டு கடைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.



சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட கட்டணங்களை முறையாக செலுத்தாத வணிக வளாகம் மற்றும் கடைகளின் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பெரியகடை வீதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் வெள்ளி பொருள் விற்பனைகம், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. 



இதனால், அந்தக் கடையின் வாசலில் மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத் தொட்டியை வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல, நிலுவைத் தொகை செலுத்தாதால் இப்பகுதியில் உள்ள மற்றொரு கடையை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...