திருப்பூர்: வரும் செப்டம்பர் மாதம், 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, பண்ருட்டி, கடலுார், அரசூர் ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர்: வரும் செப்டம்பர் மாதம், 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, பண்ருட்டி, கடலுார், அரசூர் ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும், திருப்பூர் வஞ்சிபாளையம் பிரிவு மற்றும் அலகுமலையில் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில், பேப்பர் கூழ், கிழங்கு மாவு மூலமாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அங்கு, சிலைகள் தயாரிக்கும் பணி தற்போது முடிவடைந்து சிலைகள், பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப தயாராக இருக்கிறது.
வில் ஏந்திய விநாயகர், முருகன், சிவன் உடன் இருக்கும் வகையில், அனுமன் தூக்கி செல்வது போல், ஜல்லிக்கட்டு விநாயகர், ரத விநாயகர், சிம்ம வாகனம் விநாயகர் என, 3, 5.5, 7, 9 மற்றும் 11 அடிகள் என, 5,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு திருப்பூரில் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதிகளுக்கு சிலைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.