கோவையில் தொழில் நிறுவனங்களுக்கு பயற்சி பட்டறை நடத்திய சிஐஐ

கோவை: சிஐஐ (இந்திய தொழில் கூட்டமைப்பு) சார்பில் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சி பட்டறை நேற்று நடத்தப்பட்டது.

கோவை: சிஐஐ (இந்திய தொழில் கூட்டமைப்பு) சார்பில் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சி பட்டறை நேற்று நடத்தப்பட்டது.



தொழிற்சாலைகளில் பணியாற்றும் திறன் குறைவாக உள்ள தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும் என்று, தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது. அதனை அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் கொண்டு செல்லும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று சிஐஐ சார்பில் கோவையில் தொழில் நிறுவனங்களுக்கு பயற்சி பட்டறை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் (பயிற்றுவிப்பாளர் தலைவர்) சுஜித் ராய் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "தேசம் முழுவதும் இந்த பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகளில் பற்றாக்குறையாக இருக்கும் திறமைகள் வளர்ந்து வருகின்றது.

தொழிற்சாலை தனது தொழிலாளர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும் பயிற்றுவிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தொழிற்சாலைகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை களைய இது அவசியம். பட்டதாரியாக இருக்கும் திறன் குறைந்தவர்களும், வேலையில்லாத பட்டதாரிகளும், படிக்காதவர்களும் இங்கு உள்ளனர். இதற்காக இந்திய அமைச்சகம் பயிற்றுவித்தல் நிகழ்ச்சியை நடத்துகிறது." என்றார்.



கொடிசியா தலைவர் ராமமூர்த்தி பேசுகையில், "கொடிசியா அமைப்பு, திறன் மேம்பாட்டு மையம் அமைத்து. அதன் மூலம், சிறு மற்றும் குறு நிறுவன தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்க தயாராகி வருகிறது. தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்துடன் கை கோர்த்து கோவையில் உள்ள தொழிற்சாலைகளை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்கிறோம்." என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...