நீலகிரியில் கரடி நடமாட்டத்தைக் கண்காணிக்க கோரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இரவில் மட்டுமல்லாது பகலிலும் குடியிருப்பு பகுதிகளில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை தொடர்கிறது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இரவில் மட்டுமல்லாது பகலிலும் குடியிருப்பு பகுதிகளில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை தொடர்கிறது.

தொட்ட கண்டி, மஞ்சூர், சினிமா தியேட்டர் லைன், மட்டகண்டி, தூனேரி உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், அருவங்காடு பள்ளிகள் அருகேயும் கரடு உலா வருகிறது.



கரடி நடமாட்டம் தொடர்பாக, குன்னுார் அருவங்காடு, பழைய அருவங்காடு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அருவங்காடு தொழிற்சாலையில் பள்ளிகள் அருகே, கரடி நடமாட்டம் இருப்பதாக ஆசிரியர்கள், தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மாணவ, மாணவியர் அங்கு விளையாடச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

இது குறித்து பெற்றோர் கூறுகையில், "பள்ளி மாணவ,மாணவியர் இந்த பகுதிகளில் செல்லும் போது கரடி தாக்கும் அபாயம் உள்ளதால், வனத்துறையும், தொழிற்சாலை நிர்வாகமும் சேர்ந்து, கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட

நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...